உடுமலை அருகே தலையார் என்ற இடத்தில் அரசு பேருந்தை வழி மறித்து மதம்பிடித்த யானை தாக்குதல்- பயணிகள் அலறல்

நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக படையப்பா என்ற யானை மதம் பிடித்து சுற்றி வருகின்றது .இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது.



அப்போது பேருந்தில் இருந்த மக்கள் கடும் கூச்சலிட்டனர். இருப்பினும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை யானை தாக்கியதால் சேதம் அடைந்தது. உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்து தாக்குதல் நடத்திய காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் நடுவழியில் கடும் அவதி அடைந்தனர்.



இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் மதம்பிடித்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...