உடுமலை அருகே தலையார் என்ற இடத்தில் அரசு பேருந்தை வழி மறித்து மதம்பிடித்த யானை தாக்குதல்- பயணிகள் அலறல்

நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்ததால் பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக கேரள எல்லை பகுதியான மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாக படையப்பா என்ற யானை மதம் பிடித்து சுற்றி வருகின்றது .இந்த நிலையில் நேற்று இரவு சரியாக 9 மணி அளவில் உடுமலையிலிருந்து மூணாறு சென்று விட்டு திரும்பி வரும் பொழுது தலையார் என்ற இடத்தில் குறுக்கே வந்த படையப்பா என்ற மதம்பிடித்த ஒற்றை யானை அரசு பேருந்தை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டது.



அப்போது பேருந்தில் இருந்த மக்கள் கடும் கூச்சலிட்டனர். இருப்பினும் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை யானை தாக்கியதால் சேதம் அடைந்தது. உடுமலை அருகே அரசு பேருந்தை யானை வழிமறித்து தாக்குதல் நடத்திய காரணத்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் நடுவழியில் கடும் அவதி அடைந்தனர்.



இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில் மதம்பிடித்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...