பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம்

அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 5 முக்கு மற்றும் டேங்க் ரோடு ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு அதிமுக நகர செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.என்.ஜெயராமன், கூடலூர் நகர செயலாளர் குருந்தாசலம், வீரபாண்டி நகர செயலாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை, அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.



தொடர்ந்து அவர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் அன்றாடம் வாழவே போராட வேண்டியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வை வெற்றி பெற செய்து பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யாரை கை காட்டுகிறாரோ அவரை இந்தியாவின் பிரதமராக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், பேச்சாளர் அசோக், பேரூராட்சி கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், தீபிகா, ரங்கசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், குணசேகரன், முருகேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...