கோவையில் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி- கோவை TNAU அறிவிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக ஆய்வு செய்ய தங்களது தென்னை தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள் என்று வேளாண்மை பல்கலைக்கழம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நேற்று (பிப்.29) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, பொள்ளாச்சி தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலை பகுதிகளில் தென்னையில் தற்போது காணப்படும் வேர்வாடல் நோயின் பாதிப்பு குறித்து ஆய்வு மற்றும் புள்ளி விவரம் சேகரிக்கும் பணி நாளை (மார்ச்.1) முதல் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (மார்ச்.1) காலை முதல் நேரடியாக தங்களது தோப்புகளுக்கு கிராமம் வாரியாக வரவிருக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயப் பெருமக்கள் தென்னந்தோப்பில் எத்தனை மரங்கள் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

சேதாரத்தின் மதிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் தெளிவாக தெரிவிக்கவும். மேலும் தங்கள் புகைப்படம், பண்ணை வரைபடம், ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் ஒரு நகலுடன் தயாராக இருக்குமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறையால் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு வேளாண் பல்கலை தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...