தாராபுரம் உடுமலை சாலையில் பட்டப்பகலில் அடுத்தடுத்து இரு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரில் சாமிநாதன் என்பவரின் வீட்டில் 20000 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை ஆத்திக்களம் பிரிவில் வசித்து வருபவர் காளிதாஸ் (40) இவர் தனியாக தொழில் செய்து வருகிறார்.

நேற்று குடும்பத்தினர் பகலில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர்.



பின்பு மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய், 30-ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் மற்றும் முப்பதாயிரம் மதிப்புள்ள எல்.சி.டி டிவியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



இதேபோல், காளிதாஸ் வீடு தாராபுரம் உடுமலை மெயின் ரோட்டில் உள்ளதால் பெரிய டிவியை கழட்டி மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதேபோல் ஆத்திக்களம் பிரிவை அடுத்துள்ள சரவணா நகரை சேர்ந்த சாமிநாதன் (63) இவர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.நேற்று பகலில் பள்ளி வாகனம் ஓட்டுவதற்காக சாமிநாதன் சென்று விட்டார்.

மனைவி தனலட்சுமி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மீண்டும் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 20000-ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2-சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பட்டப் பகலில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருட்டு சம்பவம் நடைபெற்ற இரண்டு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் அலங்கியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...