கோவையில் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா அரங்கத்தில், இன்று (29.02.2024) 'நான் முதல்வன்' திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



இதை தொடர்ந்து, நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு (Mentorship Portal), நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு', முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சிகள் ஆகியவற்றை அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...