கோவையில் 'நான் முதல்வன்' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி வழங்கவுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியா அரங்கத்தில், இன்று (29.02.2024) 'நான் முதல்வன்' திட்டம் மூலம் திறன் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் பணி நியமன ஆணைகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.



இதை தொடர்ந்து, நான் முதல்வன் வழிகாட்டும் இணைய முகப்பு (Mentorship Portal), நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு', முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சிகள் ஆகியவற்றை அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 228 கிராம ஊராட்சிகளுக்கு 'கலைஞர்' விளையாட்டு உபகரணங்களை வழங்கவுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...