உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்குட்பட்ட உக்கடம் புல்லுக்காடு மற்றும் ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்க பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.70க்குட்பட்ட சீத்தாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சார்பில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் 450 எண்ணிக்கையிலான நாடித்துடிப்பு பரிசோதனைக் கருவிகள் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.02.2024) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு வழங்கினார்கள்.

உடன் நகர்நல அலுவலர் மரு.வசந்த் திவாகர், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேலாளர் நடராஜன், கிளை மேலாளர் சரவணராஜன், உதவி ஆணையர்கள் பிரேம் ஆனந்த், செந்தில்குமரன், செயற்பொறியாளர் (பொ) கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், நெடுஞ்சாலைத்துறையின் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...