கோவை காரமடையில் கலப்பட மது தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி, பிரவீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில் கலப்பட மதுபானம் தயார் செய்ததாக பிரவீனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.



கோவை: கோவை மாவட்டம், காரமடையில் கலப்பட மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஹனுமந்தப்பா மகன் பிரவீன் என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினா் 2024 ஜனவரி 16-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அதன் பின்னா் அவா் பிணையில் வெளியே வந்துவிட்டார். இந்நிலையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பிரவீன் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி, பிரவீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் கலப்பட மதுபானம் தயார் செய்ததாக பிரவீனை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...