வால்பாறையில் அருகே வாழை தோட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த மளிகை கடைக்கு சீல்

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சட்டவிரோதமாக விற்கப்படும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுகிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதை தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

வாழை தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள போதை பொருட்களை கைப்பற்றி உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து தலைமையில் காவல்துறையினர் முன்னிலையில் அந்த மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் இதுபோன்று கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...