பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைப்பு - கோவை ரயில் நிலையம் அறிவிப்பு

கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 30 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 30 ஆக அதிகரிக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் இந்த கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரயில்களின் இந்த கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போன்று பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, கண்ணனூர், உள்ளிட்ட இடங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கோவை மேட்டுப்பாளையம் பாஸஞ்சரில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் இடையே எங்கு ஏரி இறங்கினாலும் ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு காலை ஐந்தே கால் மணிக்கு மற்றும் மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...