பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 லிருந்து ரூ.10 ஆக குறைப்பு - கோவை ரயில் நிலையம் அறிவிப்பு

கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பாசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 30 லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பஸ், ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயணிகள் பாசஞ்சர் ரயில்கள் விரைவு ரயிலாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 ல் இருந்து ரூபாய் 30 ஆக அதிகரிக்கப்பட்டது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதனால் ரயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் இந்த கட்டணத்தை குறைத்து மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 200 கிலோமீட்டர் தூரத்திற்கு குறைவாக செல்லும் பாசஞ்சர் ரயில்களின் இந்த கட்டணம் குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. கொரோனா காலக் கட்டத்திற்கு முன்பு இருந்ததைப் போன்று பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாசஞ்சர் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, கண்ணனூர், உள்ளிட்ட இடங்களுக்கு பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் கோவை மேட்டுப்பாளையம் பாஸஞ்சரில் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் இடையே எங்கு ஏரி இறங்கினாலும் ரூபாய் பத்து மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும் போது கோவையில் இருந்து ஈரோடு, மேட்டுப்பாளையம், பாலக்காடு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு காலை ஐந்தே கால் மணிக்கு மற்றும் மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள் குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...