கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.


கோவை: கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேரோட்டம்இன்று நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவில் தேர் திருவிழா கடந்த 20ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை ஒட்டி தினமும் பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. திருவிழாவின் ஒன்பதாவது நாளான்று இன்று தேரோட்டம் நடைபெற்றது. இது ஒட்டி இன்று காலை நாலு மணிக்கு அபிஷேகம், 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருள் நடைபெற்றது.

பிறகுமதியம் 2 மணி அளவில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இந்த தேரோட்டத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.

இதில் முக்கிய பெருமகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டன. கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கற்பகம் கல்லூரி வீதி, வைசால் வீதி, எம்பட்டி காலனி, உக்கடம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆங்காங்கே பொதுமக்களுக்கு உணவு வகைகள், நீர் மோர் என பல வகைகள் கொடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசல் முன்புறம் பள்ளிவாசலில் நிர்வாகிகள் தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தண்ணீர் பாட்டில் விநியோகம் செய்தனர்.

Newsletter

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...