சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பக்கோதிபாளையம் கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வராததால் அதிக விலைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலி குடங்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சார் ஆட்சியரிடம் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.

ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுவரைக்கும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...