சீரான குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பக்கோதிபாளையம் கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.

ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் கிராமத்தில் சுமார் 250 மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வராததால் அதிக விலைக்கு பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் பொது மக்களின் கோரிக்கைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலி குடங்களுடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சார் ஆட்சியரிடம் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்தனர்.

ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பக்கோதிபாளையம் கிராமத்தில் 250 குடும்பங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுவரைக்கும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் சார் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காமல் விட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...