உடுமலையைச் சேர்ந்த களரி பயட்டு வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பு

விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.


சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய, சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற 601 பேருக்கு 16.31

கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 37வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதி கோவாவில் நடைபெற்றது.

இதில் களரிப் போட்டி முதல் முறையாகச் சேர்க்கப்பட்டது. தமிழக அணி சார்பாக 8 பேர் கலந்து கொண்டு, அதில் நான்கு பேர் வெண்கல பதக்கம் வென்றனர். விக்னேஸ்வரன் சுவடுகள் பிரிவில் வெண்கல பதக்கமும், உரிமி வீசல் பிரிவில் விசாலி வெண்கல பதக்கமும், கெட்டுக்கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இவர்களுக்கும் திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரிப் போட்டியில் வெற்றி பெற்ற சுர்ஜித்திற்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயரிய ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்த ஊக்கத் தொகை விளையாட்டு வீரர்களின் மேற்படிப்பிற்கும், குடும்ப பொருளாதாரத்திற்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும், உயரிய ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு களரிப் பயட்டு செயலாளர் வீரமணி ஆசான் தெரிவித்தார்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...