குழிப்பட்டி மலைகிராமத்தில் சொந்த செலவில் ரேஷன் கடை கட்டித்தந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன்

ரேஷன் கடை அமைக்கப்பட்டதையடுத்து, ரேஷன் பொருட்கள் அனைத்தும் மலைக்கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள், திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வன சரகங்கள் உள்ளன. இங்கு குழிப்பட்டி, குருமலை, கோடந்தூர், தளிஞ்சி உள்ளிட்ட 18 மலை கிராமங்களில் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு இப்பகுதியில் புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி வனத்துறை அதிகாரிகள் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது இவர்களின் நீண்ட நாள் போராட்டமாகவே உள்ளது. 2006 மன உரிமைச் சட்டத்தை இப்பகுதியில் அமல்படுத்தி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மலை கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை செய்து பார்த்தும், இதுவரை செவி சாய்க்காமல் இருக்கும் வனத்துறை அதிகாரிகள். இந்த நிலையில் குழிப்பட்டி உள்ளிட்ட மலை கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நகரப் பகுதிக்கு சுமார் 14 கிலோமீட்டர் அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை கடந்து வனப்பகுதியில் நடந்து வந்து பொருட்களை வாங்கிச் சென்று வந்தனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடையை மலை கிராமத்தில் அமைத்து தர கோரிக்கை வைத்தனர். மலை கிராம மக்களின் அவல நிலையை கண்ட திமுக மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை மலை கிராமத்திலேயே கட்டிக் கொடுத்துள்ளார்.

இதனால் தற்போது ரேஷன் பொருட்கள் அனைத்தும் அங்கு கொண்டு செல்லப்பட்டு மலை கிராமத்திலேயே அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தங்களது நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கண்ட திமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் அவர்களுக்கு மலை கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசு தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் சாலை உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்து வரும் நிலையில் மீதமுள்ள அடிப்படைத் தேவைகளையும் விரைந்து செய்து கொடுத்து மலை கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மலைவாழ் மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...