முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலையில் அன்னதானம்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆம் ஆண்டு பிறந்த நாளைமுன்னிட்டு முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதே போல பெரிய கோட்டை ஊராட்சி அய்யலுமீனாட்சி நகரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.

பின்னர் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . அப்போது முதியவர் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறுதியாக உடுமலை பேருந்து நிலையத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி சார்பில் பொதுமக்களுக்கு தக்காளி சாதம், தயிர் சாதம் மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

உடுமலை போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் நிர்வாகிகள் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் தங்கவேல், உடுமலை கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ்குமார், ரத்தினசாமி, கதிர்வேல், முத்துசாமி, திருப்பூர் புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்வராஜ், பெரியகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் செயலாளர் ,நாகராஜ் மாவட்ட இணை செயலாளர் மகேஷ் குமார், கலை பிரிவு மாவட்ட துணை செயலாளர் சீனிவாச பிரபு, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட இணை செயலாளர் இளம்பிறை சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...