தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 4 கோடியே 70-லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் தொடக்கம்

திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் ஆகியவற்றை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டம் 2023-24 இன் கீழ் புதிய மழைநீர் வடிகால், சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் சின்னக் கடைவீதி டி எஸ் கார்னர் பகுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் வார்டு பகுதியில் உள்ள பழைய திருப்பூர் சாலை குடிசை பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கட்டுதல் மாநில நிதி குழு திட்டம் - பள்ளி மேம்பாட்டு நிதி - உட்கட்டமைப்பு பணிகள், வார்டு.17 வளையற்காரதெரு நகராட்சி நடுநிலை பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, தூய்மை பாரத இயக்கம் நமக்கு நாமே 2.0 திட்டத்தில் 2023-2024இன் கீழ் வார்டு.9 சூளைமேடு பகுதியில் புதிய பொது கழிப்பிடம் கட்டும் பணி 15.வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் 14,தார் சாலைகள் மேம்படுத்தும் பணி, திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி,நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் நகராட்சி நிதி - குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதியின் கீழ் 1 முதல் 30 வார்டுகளில் தண்ணீர் வசதிகள் செய்தல் என 4, கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 56-பணிகளை தொடங்கி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...