தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 4 கோடியே 70-லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 பணிகள் தொடக்கம்

திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி, நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் ஆகியவற்றை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நமக்கு நாமே திட்டம் 2023-24 இன் கீழ் புதிய மழைநீர் வடிகால், சிமெண்ட் கான்கிரீட் தளம் மற்றும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பணிகளை தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் சின்னக் கடைவீதி டி எஸ் கார்னர் பகுதியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் வார்டு பகுதியில் உள்ள பழைய திருப்பூர் சாலை குடிசை பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கட்டுதல் மாநில நிதி குழு திட்டம் - பள்ளி மேம்பாட்டு நிதி - உட்கட்டமைப்பு பணிகள், வார்டு.17 வளையற்காரதெரு நகராட்சி நடுநிலை பள்ளியில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி, தூய்மை பாரத இயக்கம் நமக்கு நாமே 2.0 திட்டத்தில் 2023-2024இன் கீழ் வார்டு.9 சூளைமேடு பகுதியில் புதிய பொது கழிப்பிடம் கட்டும் பணி 15.வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் 14,தார் சாலைகள் மேம்படுத்தும் பணி, திடக்கழிவு மேலாண்மை, சிமெண்ட் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி,நகராட்சி நிதி - வருவாய் மற்றும் மூலதன நிதியின் கீழ் வார்டு 1 முதல் 30-வார்டுகள் வரை அடிப்படை வசதிகள் செய்தல் நகராட்சி நிதி - குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதியின் கீழ் 1 முதல் 30 வார்டுகளில் தண்ணீர் வசதிகள் செய்தல் என 4, கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 56-பணிகளை தொடங்கி வைத்து அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...