பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலின் குண்டம் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபட்ட பின்னர் கோவில் அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உட்பட 20 -க்கும் மேற்பட்ட அருளாளிகள் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு அம்மனின் சூலம் தாங்கி வந்தனர். சயன கோலத்தில், மயான தேவதையின் உருவம் மயான மண்ணால் உருவாக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் பம்பை இசை முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டது. அருளாளி அருண் அம்மனின் மண் உருவத்தை சிதைத்து, எலும்பை வாயில் கவ்வியப்படி நடனம் ஆடிக்கொண்டு பட்டுசேலையில் பிடி மண்ணினை எடுத்தார்.



பின்னர் மயான பூஜை நள்ளிரவு 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி, ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...