கோவையில் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பதிலாக கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கான இரண்டு ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டது.


Coimbatore: கோவையில் சாய்பாபாகாலனி, வடகோவை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த கப்ரஸ்தான் பயன்பாட்டுக்கான இரண்டு ஏக்கர் நிலம், தமிழக அரசு மூலமாக ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இந்த நில ஒதுக்கீடு, சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உடனடி முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. சங்கனூர் பகுதியில் உள்ள இந்த இரண்டு ஏக்கர் நிலம் தற்போது ஜமாத் நிர்வாகிகளுக்கு பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. நில ஒப்படைப்பு நிகழ்ச்சி கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, கோவை மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளர் ஹைதர் அலி, அனைத்து ஜமாத் பொதுச் செயலாளர் முகமது அலி மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி ஆகியோரிடம் நடைபெற்றது. பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி, இந்த கோரிக்கை சுமார் முப்பது ஆண்டுகள் காலமாக இருந்ததாகவும், இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு அனைத்து ஜமாத் சார்பாக நன்றிகளை தெரிவித்ததாகவும் கூறினார்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முஸ்லிம் ஜமாத் மற்ற ும் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், பல் சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாஹிர் வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், பாபுலால் ஏர்டெல் அபுதாஹிர், மனிதநேய மக்கள் கட்சி அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் மூலம் நலிவுற்றவர்களின் வாழ்க்கை ஏற்றம் பெறும் வகையில் இருப்பதாகவும், கோவையில் டைடல் பூங்கா மற்றும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் மகிழ்ச்சியை தருவதாகவும் தலைவர் முகம்மது ரபி கூறினார். இந்த நில ஒப்படைப்பு நிகழ்ச்சி மூலம் சுமார் முப்பது ஆண்டுகால இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவர்களின் சமூகத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...