கோவையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஆதரித்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது மத்திய அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின்(IAL) ஒருங்கிணைப்பில் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீதான மத்திய அரசின் தாக்குதல்களை கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்(IAL), அகில இந்திய வழக்குரைஞர்கள்சங்கம்(AILU), மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL), சமூக நீதி வழக்குரைஞர்கள் சங்கம்(AUSJ) ஆகிய அமைப்புகள் இணைந்து கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று (பிப்.18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



IAL மாவட்டத் துணைத் தலைவர் தோழர் அர்ஜுனன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், PUCL தேசிய செயலாளர் தோழர் ச.பாலமுருகன், மாவட்டச்செயலாளர் தோழர் சேகர் அண்ணாதுரை, AUSJ மாவட்டச் செயலாளர் தோழர் வெண்மணி, AILU மாவட்டச் செயலாளர் தோழர் ஜோதிகுமார், IAL மாவட்டத்தலைவர் இரவி, மாவட்ட செயலாளர் தோழர் சக்திவேல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டு, ஒன்றிய பிஜேபிக்கு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...