உடுமலை அருகே புத்தர் கோவில் கட்ட இடையூறு- மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர் நேரில் ஆய்வு

புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது என புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சிலர் அந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களிடம் கடந்த மாதம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுமானபணிகள் தடை படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் கூறியதாவது, புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்து கட்டுமான பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் பிக்கு மெளரியா புத்தா நிலையமுத்தூர் அருகில் புத்தர் கோவில் பார்வையிட்டால் அப்போது புத்தர் கோவில் கட்டுவதில் இடையூறாக இருப்பதாக மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு வந்த நிலையில் இன்று ஆய்வுக்கு வந்துள்ளோம்.

இங்கு வந்து பார்த்தபோது கோவில் கட்டுவதற்கு இடையூறு இருப்பதாக தெரியவில்லை. கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...