உடுமலை அருகே புத்தர் கோவில் கட்ட இடையூறு- மாநில சிறுபான்மையினர் நல உறுப்பினர் நேரில் ஆய்வு

புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது என புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு சிலர் அந்த கோவில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் அவர்களிடம் கடந்த மாதம் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கட்டுமானபணிகள் தடை படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து புத்தர் கோவில் கட்டுமான நிர்வாகிகள் கூறியதாவது, புத்தர் கோவில் கட்டுமான பணி முறைப்படியாக கிரையம் பெற்ற பூமியில் தான் நடைபெற்று வருகிறது. கோவிலின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத ஒரு சிலர் தவறான தகவல்களுடன் மனு அளித்து கட்டுமான பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாநில சிறுபான்மையினர் ஆணையம் உறுப்பினர் பிக்கு மெளரியா புத்தா நிலையமுத்தூர் அருகில் புத்தர் கோவில் பார்வையிட்டால் அப்போது புத்தர் கோவில் கட்டுவதில் இடையூறாக இருப்பதாக மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மனு வந்த நிலையில் இன்று ஆய்வுக்கு வந்துள்ளோம்.

இங்கு வந்து பார்த்தபோது கோவில் கட்டுவதற்கு இடையூறு இருப்பதாக தெரியவில்லை. கோவில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...