அடிப்படை வசதி செய்துதரக்கோரி காரமடை அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை

பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை எனம்பேத்கர் நகரில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: காரமடை நகராட்சிக்கு உட்பட்ட எத்தப்பநகர் அடுத்த அம்பேத்கர் நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் வாழும் மக்களுக்கு பட்டா அளித்து நான்கு வருடம் ஆயிற்று. இருப்பினும் இன்று வரை இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை என்று இங்கு வாழும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப்.19) அந்த பகுதியில் வசிக்கும் ஊர் மக்களில் ஒருவரான சுமித்ரா என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. பொதுக் கழிப்பிட வசதி இல்லை, தார்சாலை வசதி இல்லை. குறிப்பாக இங்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி என எதுவும் இல்லை. மின்சாரம் இல்லாததால் பலரும் இங்கு வந்து மது அருந்துகின்றனர்.

இந்த பகுதி அருகே கல்லுக்குழி இருப்பதால் அங்கு ஆண்கள் பலரும் மது அருந்துகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்ல முடிவதில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள் கீழே அடிக்கடி விழுந்து காயங்கள் ஏற்படுகிறது.

இங்கு குடிநீர் வசதி இல்லை என்பதால், நல்ல தண்ணீர் 300 ரூபாய்க்கும், உப்பு தண்ணீரை ரூபாய் 700 ரூபாய்க்கும் வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களை 7 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று அழைத்தால், உங்கள் ஊர் இருட்டாக உள்ளது எனக் கூறி அவர்கள் வருவதில்லை.

இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் என்று கூறினார். மேலும் இதுகுறித்து அரசாங்கத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். பின்னர் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...