கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக சரிவு – நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு

கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம், நேற்று சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 26 வார்டுகள், நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி அணை பிரதான குடிநீா் ஆதாரமாக உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக 10 கோடி லிட்டா் (100 எம்.எல்.டி) தண்ணீா் எடுக்கப்பட்டு வந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால் அணையின் நீா்மட்டம் 20 அடிக்குமேல் உயராமல் காணப்பட்டது. இதனால், சிறுவாணி அணையில் இருந்து குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீா்மட்டம் 32 அடி வரை உயா்ந்தது. அதற்கு மேல் நீா்மட்டம் உயரவில்லை. நடப்பாண்டு ஜனவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 26 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை நிலவரப்படி 23 அடியாக சரிந்துள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அணையின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...