கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் எபிவிபி அமைப்பு மனு

கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர் என்று எபிவிபி அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகளவில் இருப்பதால் கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்து வருவதால் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டக் கல்லூரி மாணவர் விக்னேஷ், கோவை மாவட்டத்தில் அதிகளவில் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாகவும் அதனை கல்லூரி மாணவர்கள் வாங்கி பயன்படுத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் பழக்கத்தினால் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு படிப்பையும், எதிர்காலத்தையும் வீணாக்கி வருகின்றனர்.



இதனால் காவல்துறையினர் மாணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து எதிர்காலத்தை வீணாக்குகின்றனர். தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும் போதை பொருட்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அலட்சிய போக்கால் நாளுக்கு நாள் போதை பொருள் அதிக அளவில் விற்பனையாகி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...