கோவை வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு

குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌ இன்று (19.02.2024) நேரில்‌ ஆய்வு மேற்கொண்டனா்‌.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌, நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.



தொடர்ந்து, அப்பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைப்பது தொடர்பாகவும்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடாந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட நஞ்சை கவுண்டன்‌ புதூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ தொடாபாகவும்‌, ரங்கா நகர்‌ பகுதியில்‌ 24மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ்‌ பிரதான குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

மேலும்‌, வார்டு எண்‌.19க்குட்பட்ட விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ணாபுரம்‌, ஸ்ரீவாரி குடியிருப்பு பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌, நகரில்‌ பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குப்பைகளை முறையாக தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்காதவாகளுக்கு அபராதம்‌ விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.11க்குட்பட்ட சிவசக்தி நகர்‌, மாருதி நகர்‌ பகுதியில்‌ புதிதாக தார்‌ சாலை அமையவுள்ள இடத்தினையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆப்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ ராமமூராத்தி, பழனிசாமி (௭) சிரவை சிவா, உதவி ஆணையர்‌ ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்‌ எழில்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ பவுன்ராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌ உட்பட பலர் உள்ளனர்‌.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...