கோவை வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர்‌ பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ ஆய்வு

குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌ இன்று (19.02.2024) நேரில்‌ ஆய்வு மேற்கொண்டனா்‌.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ ஆகியோர்‌, நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.



தொடர்ந்து, அப்பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைப்பது தொடர்பாகவும்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடாந்து, மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.12க்குட்பட்ட நஞ்சை கவுண்டன்‌ புதூர்‌ பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ பில்லூர்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ தொடாபாகவும்‌, ரங்கா நகர்‌ பகுதியில்‌ 24மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ்‌ பிரதான குடிநீர் குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

மேலும்‌, வார்டு எண்‌.19க்குட்பட்ட விவேகானந்தர் தெரு, ராமகிருஷ்ணாபுரம்‌, ஸ்ரீவாரி குடியிருப்பு பகுதியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌‌, நகரில்‌ பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, குப்பைகளை முறையாக தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்காதவாகளுக்கு அபராதம்‌ விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌, வார்டு எண்‌.11க்குட்பட்ட சிவசக்தி நகர்‌, மாருதி நகர்‌ பகுதியில்‌ புதிதாக தார்‌ சாலை அமையவுள்ள இடத்தினையும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆப்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வுகளின்போது, மாமன்ற உறுப்பினர்கள்‌ ராமமூராத்தி, பழனிசாமி (௭) சிரவை சிவா, உதவி ஆணையர்‌ ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர்‌ எழில்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்‌ பவுன்ராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலா்கள்‌ உட்பட பலர் உள்ளனர்‌.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...