கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் திறப்பு விழா

முப்பெரும் விழாவையொட்டி, பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆடிட்டோரியம் திறப்பு விழா விளையாட்டு விழா மற்றும் கல்வெட்டு திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவை லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் அக்ஷயம், சிஆர்ஐ பம்புகள் மற்றும் சித்தாப்புதூர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் என அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.

இவ்விழாவையொட்டி பள்ளியில் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பள்ளியில் திறம்பட பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் சித்தாபுதூர் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நிர்மலா, சிஆர்ஐ பம்புகள் பொது மேலாளர் விஜயராஜ், முன்னாள் மாவட்ட ஆளுநர் மற்றும் மாவட்ட கூட்டு பொருளாளர் எஸ்.ராம்குமார், இரண்டாம் துணை நிலை ஆளுநர் ஏ.ராஜசேகர், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ஆர்.என்.கருணாநிதி, சித்தாபுதூர் முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் மனோகரன், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் அக்ஷயம் பொருளாளர் எம்.ஜே.எப். டாக்டர் டி.கர்ணன், சிஆர்ஐ பம்புகள் எஸ்.ராஜா, முன்னாள் மாவட்ட ஆளுநர் சாரதாமணி பழனிச்சாமி, பசிப்பிணி போக்குதல் மாவட்ட தலைவர் செல்வராஜ், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்கியும் ஆசிரியர்களை ஊக்கப் படுத்தியும் பேசினார்கள்.



நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.கே.விஜயலட்சுமி மற்றும் அக்ஷயம் சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...