கோவை ஆனைகட்டி சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு

பேருந்தை நோக்கி ஒற்றை காட்டு யானை வருவதை பார்த்த பேருந்து ஓட்டுநர், பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார். சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் பேருந்தை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை, பின்னர் சாலை ஓரம் சென்று வனப்பகுதிக்குள் சென்றது.


கோவை: கோவை ஆனைகட்டி மலைப்பாதையில் நேற்று மாலை 5 மணியளவில் கோவையில் இருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மலைப்பாதையில் திடீரென ஒற்றை காட்டு யானை ஒன்று குறுக்கிட்டுள்ளது.



அப்போது பேருந்தை நோக்கி அந்த காட்டு யானை வரவே பேருந்து ஓட்டுநர் பேருந்தை சிறிது தூரம் பின்னோக்கி இயக்கினார். சுமார் 15 நிமிடத்திற்கு மேல் சாலையில் மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை சாலை ஓரம் சென்று வனப்பகுதிக்குள் சென்றது.

அதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி ஆனைகட்டிக்குச் சென்றார். காட்டு யானை பேருந்தை வழிமறித்ததால், பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...