கோவையின் பெருமையை பாடி பேரூர் பகுதியை சேர்ந்த சிறுமி அசத்தல்

கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார்-மஹாலஷ்மி தம்பதியினர். இவர்களது 13 வயது மகள் ஜனிக்கா ஸ்ரீ. இவர், வாசவி வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.

சிறு வயதில் இருந்தே நாட்டுபுற பாடல்களில் ஆர்வம் கொண்ட அவர், சிறு சிறு நாட்டுப்புற பாடல்களை பாடி வருகிறார். இந்நிலையில் தற்போது கோவையின் பெருமையை பாடி அசத்தி உள்ளார். கோவையின் இயற்கை வளங்கள், கொங்கு தமிழ், கோவை சுற்று சூழல், கோவை மண்ணின் பெருமை ஆகியவற்றை பாடலாக பாடி வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று (பிப்.18) இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரது இந்த பாடலை கோவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...