மோடி அரசின் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பாஜக அரசு பெற்றுள்ளது. இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி திருவள்ளூர் திடலில் மத்திய அரசு மோடியின் ஆட்சியில் தேர்தல் பத்திர மெகா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்றது.



இதில் பாஜக சார்ந்த கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி அதற்கு கைமாறாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5,270 கோடி வசூல் செய்து தேர்தல் பத்திர திட்டங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்த போதும் இந்தத் தொகை யாரிடம் பெறப்பட்டது என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்க முடியாத அளவிற்கு சட்ட திருத்தத்தை மோடி அரசு செய்துள்ளது. 2022 -2023 ஆண்டில் மட்டுமே தேர்தல் பத்திரத்தின் மூலம் ரூபாய் 20,120 கோடியை பெற்றுள்ளது.

இதனை உச்ச நீதிமன்றம் மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே மோடி அரசின் தேர்தல் பத்திரமான ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார், மாநில பொது குழு உறுப்பினர் ஜோதிமணி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் ரவி உட்பட ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...