உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு – நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில், தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் விலையும் தக்காளிகளை உடுமலை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. மழைப்பொழிவு காரணமாக தற்பொழுது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தக்காளி தரமில்லாமல் மாறி மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை செய்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக செடிகள் காய்ந்தும் காய்கள் வெளிர் நிறத்துக்கு மாறியும் பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையும் சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...