உடுமலையில் தக்காளி விலை கடும் சரிவு – நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில், தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பகுதிகளில் விலையும் தக்காளிகளை உடுமலை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கேரள மாநிலம் மறையூர், மூணாறு மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தக்காளிக்கு நல்ல விலை கிடைத்தது. மழைப்பொழிவு காரணமாக தற்பொழுது தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தக்காளி தரமில்லாமல் மாறி மகசூல் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உடுமலை சந்தையில் தக்காளி விலை கடும் சரிவை செய்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 கிலோ கொண்ட பெட்டி 600 முதல் 800 ரூபாய் விற்று வந்த நிலையில் தற்பொழுது ஒரு பெட்டி 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆகிறது.

விவசாயிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பின் காரணமாக செடிகள் காய்ந்தும் காய்கள் வெளிர் நிறத்துக்கு மாறியும் பெருமளவு மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விலையும் சரிந்து வருவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...