கோவை TNAU-வில் நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம் என்று வேளாண் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கொச்சி நறுமணப் பயிர்கள் வாரியமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு இயக்ககமும் இணைந்து நறுமணப் பொருள்கள் விற்போர்- வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் செயலா் டி.சத்தியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசியதாவது, உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்ட நிலையில், விவசாயிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் குங்குமப்பூவை பயிர் செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காஷ்மீரில் உள்ள ஷோ் இ காஷ்மீா் வேளாண் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கிருந்து விதைக் கிழங்குகளைப் பெற்று வந்து உதகை, கொடைக்கானல், ஏற்காடு, தடியன்குடிசை (வத்தலகுண்டு) மலைப் பகுதிகளில் பயிரிட்டு சோதனை நடத்தி வருகிறோம்.

பசுமைக் குடில்களிலும், குளிரான மலைப் பகுதிகளிலும் நாம் பயிரிட்ட குங்குமப்பூ நன்றாக விளைந்திருக்கிறது. காஷ்மீரில் விளையக் கூடிய குங்குமப்பூவுக்கும் இங்கு விளையக் கூடிய பூவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நல்ல தரமான குங்குமப்பூவாக இருக்கும்பட்சத்தில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக பயிரிட ஊக்குவிக்கப்படும். அதேபோல, தாளவாடி பகுதியில் ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகை நறுமணப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், ஆலப்புழை பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து விருதுநகா் சம்பா மிளகாய், விளாத்திக்குளம் முண்டு மிளகாய் வற்றல், காரமடை செங்காம்பு கறிவேப்பிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இயக்குநா் ஏ.பி.ரேமா ஸ்ரீ, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் இ.சோமசுந்தரம், நறுமணப் பயிர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...