கோவை TNAU-வில் நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம் என்று வேளாண் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கொச்சி நறுமணப் பயிர்கள் வாரியமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு இயக்ககமும் இணைந்து நறுமணப் பொருள்கள் விற்போர்- வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் செயலா் டி.சத்தியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசியதாவது, உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்ட நிலையில், விவசாயிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் குங்குமப்பூவை பயிர் செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காஷ்மீரில் உள்ள ஷோ் இ காஷ்மீா் வேளாண் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கிருந்து விதைக் கிழங்குகளைப் பெற்று வந்து உதகை, கொடைக்கானல், ஏற்காடு, தடியன்குடிசை (வத்தலகுண்டு) மலைப் பகுதிகளில் பயிரிட்டு சோதனை நடத்தி வருகிறோம்.

பசுமைக் குடில்களிலும், குளிரான மலைப் பகுதிகளிலும் நாம் பயிரிட்ட குங்குமப்பூ நன்றாக விளைந்திருக்கிறது. காஷ்மீரில் விளையக் கூடிய குங்குமப்பூவுக்கும் இங்கு விளையக் கூடிய பூவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நல்ல தரமான குங்குமப்பூவாக இருக்கும்பட்சத்தில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக பயிரிட ஊக்குவிக்கப்படும். அதேபோல, தாளவாடி பகுதியில் ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகை நறுமணப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், ஆலப்புழை பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து விருதுநகா் சம்பா மிளகாய், விளாத்திக்குளம் முண்டு மிளகாய் வற்றல், காரமடை செங்காம்பு கறிவேப்பிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இயக்குநா் ஏ.பி.ரேமா ஸ்ரீ, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் இ.சோமசுந்தரம், நறுமணப் பயிர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...