கோவை TNAU-வில் நறுமணப் பொருள்கள் விற்போர் – வாங்குவோர் சந்திப்பு

தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம் என்று வேளாண் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


கோவை: கொச்சி நறுமணப் பயிர்கள் வாரியமும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வணிக மேம்பாட்டு இயக்ககமும் இணைந்து நறுமணப் பொருள்கள் விற்போர்- வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நேற்று (பிப்.15) நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் செயலா் டி.சத்தியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி பேசியதாவது, உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துவிட்ட நிலையில், விவசாயிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, தென்னை விவசாயிகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் ஜாதிக்காயை தங்களது வயல்களில் ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.

இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் மலைப் பகுதிகளில் குங்குமப்பூவை பயிர் செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காஷ்மீரில் உள்ள ஷோ் இ காஷ்மீா் வேளாண் அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கிருந்து விதைக் கிழங்குகளைப் பெற்று வந்து உதகை, கொடைக்கானல், ஏற்காடு, தடியன்குடிசை (வத்தலகுண்டு) மலைப் பகுதிகளில் பயிரிட்டு சோதனை நடத்தி வருகிறோம்.

பசுமைக் குடில்களிலும், குளிரான மலைப் பகுதிகளிலும் நாம் பயிரிட்ட குங்குமப்பூ நன்றாக விளைந்திருக்கிறது. காஷ்மீரில் விளையக் கூடிய குங்குமப்பூவுக்கும் இங்கு விளையக் கூடிய பூவுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன, சரியான தரத்தில் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன.

நல்ல தரமான குங்குமப்பூவாக இருக்கும்பட்சத்தில் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி பரவலாக பயிரிட ஊக்குவிக்கப்படும். அதேபோல, தாளவாடி பகுதியில் ரோஸ்மேரி உள்ளிட்ட மூலிகை நறுமணப் பொருள்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறோம். கன்னியாகுமரி கிராம்பு, ஈரோடு மஞ்சள், ஆலப்புழை பச்சை ஏலக்காய், மலபார் மிளகு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதைத் தொடா்ந்து விருதுநகா் சம்பா மிளகாய், விளாத்திக்குளம் முண்டு மிளகாய் வற்றல், காரமடை செங்காம்பு கறிவேப்பிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளோம் என்றார்.

இந்த நிகழ்வில் நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இயக்குநா் ஏ.பி.ரேமா ஸ்ரீ, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநா் இ.சோமசுந்தரம், நறுமணப் பயிர் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...