உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை ஊராட்சி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திறந்தவெளி கிணற்றில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(35)என்பவர் தவறி விழுந்து விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரா.லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் குரல்குட்டைக்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் குரல் குட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....