உடுமலை அருகே குரல்குட்டை ஊராட்சியில் கிணற்றில் தவறி விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்து மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணை, தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை ஊராட்சி உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள திறந்தவெளி கிணற்றில் இன்று அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(35)என்பவர் தவறி விழுந்து விட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் உடுமலை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ரா.லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் குரல்குட்டைக்கு விரைந்தனர்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி மோட்டார் குழாயை பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளையம்மாளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் குரல் குட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...