உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசினர்.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சிபாய்(வ.ஊ), சுப்பிரமணியம்(கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர 28 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் 26 தீர்மானங்கள் பல்வேறு செலவினங்கள் குறித்தும், 27-வது தீர்மானத்தில் கிராமங்களில் கல்வெட்டு, கான்கிரீட் சாலை, ஓரடுக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை, மழை நீர் வடிகால், சின்டெக்ஸ் அமைத்தல் மற்றும் தேவனூர் புதூர் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இடம் பெற்றிருந்தது.

28-வது தீர்மானமாக புதிய ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்க கோரப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிஞ்சேரி கிராமத்தில் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற்று தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறாக பயன்படுத்தும் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கூட்டத்திற்கான பயணப்படியை வழங்குவதற்கு முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...