உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் - 28 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசினர்.


திருப்பூர்: உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சிபாய்(வ.ஊ), சுப்பிரமணியம்(கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர 28 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் 26 தீர்மானங்கள் பல்வேறு செலவினங்கள் குறித்தும், 27-வது தீர்மானத்தில் கிராமங்களில் கல்வெட்டு, கான்கிரீட் சாலை, ஓரடுக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை, மழை நீர் வடிகால், சின்டெக்ஸ் அமைத்தல் மற்றும் தேவனூர் புதூர் ஊராட்சியில் சேதமடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இடம் பெற்றிருந்தது.

28-வது தீர்மானமாக புதிய ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்க கோரப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது, கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து உள்ளதால் கிராமங்களில் நடைபெறுகின்ற பணிகள் தேக்கமடைவதை தவிர்க்க வேண்டும். கிராமங்களில் நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிஞ்சேரி கிராமத்தில் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற்று தென்னை மரத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறாக பயன்படுத்தும் குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கூட்டத்திற்கான பயணப்படியை வழங்குவதற்கு முன் வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். ஒன்றிய குழு உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...