பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடல் குழு நீக்க மாத்திரை பற்றி தாய்மார்களுக்கு விளக்கம்

குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகையை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என காணொளி மூலம் விளக்கப்பட்டது.


கோவை: தேசிய குடல் குழு நீக்க நாள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் கொண்டாடப்பட்டது.



குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமுதா, செவிலியர் ராணி, கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இதில், சிகிச்சைக்கு வந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன் நன்மைகள் விளக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது.



அதிக ரத்த சோகை உள்ள பெண்கள் கடைசி கட்டத்தில் பிரசவத்துக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட அபாயம் உள்ளது. ரத்தசோகை இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுப்பதற்காக வளரும் இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கலாம். இவை அனைத்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...