பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடல் குழு நீக்க மாத்திரை பற்றி தாய்மார்களுக்கு விளக்கம்

குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகையை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என காணொளி மூலம் விளக்கப்பட்டது.


கோவை: தேசிய குடல் குழு நீக்க நாள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் கொண்டாடப்பட்டது.



குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமுதா, செவிலியர் ராணி, கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இதில், சிகிச்சைக்கு வந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன் நன்மைகள் விளக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது.



அதிக ரத்த சோகை உள்ள பெண்கள் கடைசி கட்டத்தில் பிரசவத்துக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட அபாயம் உள்ளது. ரத்தசோகை இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுப்பதற்காக வளரும் இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கலாம். இவை அனைத்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...