பட்டா வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் குறிச்சி உப்பிலிதிட்டு மக்கள் மனு

மதுக்கரை தாலூக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுவரை இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்காததால், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.


கோவை: 50 வருடங்களுக்கு மேலாக மதுக்கரை தாலுக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு இதுவரை பட்டா வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் 200 குடும்பங்களை சார்ந்த பிரதிநிதிகள் இன்று (பிப்.12) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இடம் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், கோவை மாவட்டம், மதுக்கரை தாலூக்கா, குறிச்சி, உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதார், மின் இணைப்பு, ரேசன் கார்டு, வீட்டு வரி, கேஸ் இணைப்பு என அனைத்தும் பல வருடங்களாக இங்கு குடியிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நாங்கள் எங்கள் வீடுகளுக்கான பட்டாவானது இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்படவில்லை. நாங்கள் வயதானவர்கள், குழந்தைகள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை நேரில் முறையிட்டும் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள க.ச.எண். 149க்கு பட்டா அளித்ததனை தாங்கள் கருத்தில் கொண்டு அதனை மேற்கோள்காட்டி மீதமுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தாங்கள் முன் வந்து பட்டா அளிக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...