பட்டா வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் குறிச்சி உப்பிலிதிட்டு மக்கள் மனு

மதுக்கரை தாலூக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுவரை இந்தப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்காததால், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.


கோவை: 50 வருடங்களுக்கு மேலாக மதுக்கரை தாலுக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு இதுவரை பட்டா வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் 200 குடும்பங்களை சார்ந்த பிரதிநிதிகள் இன்று (பிப்.12) நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இடம் மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், கோவை மாவட்டம், மதுக்கரை தாலூக்கா, குறிச்சி, உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதார், மின் இணைப்பு, ரேசன் கார்டு, வீட்டு வரி, கேஸ் இணைப்பு என அனைத்தும் பல வருடங்களாக இங்கு குடியிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் நாங்கள் எங்கள் வீடுகளுக்கான பட்டாவானது இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்படவில்லை. நாங்கள் வயதானவர்கள், குழந்தைகள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை நேரில் முறையிட்டும் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள க.ச.எண். 149க்கு பட்டா அளித்ததனை தாங்கள் கருத்தில் கொண்டு அதனை மேற்கோள்காட்டி மீதமுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தாங்கள் முன் வந்து பட்டா அளிக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...