விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் ஏப்ரல் 14ஆம் தேதி விஷு பண்டிகையை கொண்டாட இவை அனுப்பப்பட்டுள்ளன.


Coimbatore: மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை முன்னிட்டு கோவையிலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர்,ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. ஈரான் -இஸ்ரேல் நாடுகள் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் அபுதாபிக்கு வழங்கப்பட்ட நேரடி விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மார்ச் 9-ம் தேதி முதல் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டன. வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ஈரான்- இஸ்ரேல் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதும் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை ஏப்ரல் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் மலையாள புத்தாண்டு தினத்தை கொண்டாட உதவும் வகையில் விமானங்களில் பல்வேறு காய்கறி மற்றும் பழங்கள் அதிக அளவு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 15 டன் எடையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறும் போது, வழக்கமாக கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு கார்மென்ட்ஸ், தொழிற்சாலை சார்ந்த பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவை புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். தீபாவளி, ஓணம் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வழக்கமான பொருட்களை தவிர்த்து பண்டிகை தொடர்பான பொருட்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாண்டு மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள கேரள மக்கள் இப்பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...