சரவணம்பட்டியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி வழங்கப்படும் என கூறி ஆட்களை அழைத்து வந்து ஏமாற்றியதாக 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்ததுடன், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய நிலையில் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பணம் செலுத்தியவர்களுக்கு பட்டா மற்றும் வீட்டின் சாவி ஆகியவை அமைச்சர் கையால் வழங்கப்படும் எனக் கூறி மேட்டுப்பாளையம் காரமடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.



ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர்களுக்கு பட்டா மற்றும் சாவி ஆகியவை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளிடம் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அழைத்து வரும்பொழுது வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்த அதிகாரிகள், நிகழ்ச்சி முடிந்த பிறகு தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...