உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க உடன்படததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உப்பாறு அணை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உப்பாறு அணையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் போது தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தெரிவித்தனர்.

ஆனால் கூறியவாறு தண்ணீர் கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு 19-வது நாளாக இன்று காத்திருப்பு . போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகிய 8-பேர் தற்போது தண்ணீர் வழங்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...