உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க உடன்படததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் உப்பாறு அணை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளை 4 முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பின்னர் கடைசி நேரத்தில் கூட்டத்தை ரத்து செய்வதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் உப்பாறு அணையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் போது தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு தண்ணீர் தருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தெரிவித்தனர்.

ஆனால் கூறியவாறு தண்ணீர் கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு அணையின் பொறியாளர் அலுவலகம் முன்பு 19-வது நாளாக இன்று காத்திருப்பு . போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அருகில் இருந்த செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகிய 8-பேர் தற்போது தண்ணீர் வழங்க வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...