உடுமலை அருகே சின்னாறு வனப்பகுதியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சின்னாறு வனப்பகுதியில் வனச்சரகர் சிவக்குமார் ஏற்பாட்டில் கோடந்தூர், பொற்பாற்குடி, ஆட்டுமலை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வனப்பகுதி, குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் முதல் கட்டமாக தீயை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன.



வனப்பகுதியில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது எனவும், இரவு நேரங்களில் வனவிலங்குகளை விரட்ட தீ பந்தம் போன்றவை பாதுகாப்பான முறையில் தயார் செய்யப்பட்டு வனவிலங்குகளை விரட்ட வேண்டும் எனவும் மலைவாழ் மக்களுக்கு உடுமலை தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஐந்து கிராம மலைவாழ் மக்கள் மற்றும் வனத்துறையினர்

கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...