கோவையில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்டு, ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.


கோவை: கோவை, காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்ட "அருள்மிகு ஶ்ரீ கண்ணனுர் மாரியம்மன் கோவிலுக்கு" மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென தமிழக சட்ட சபையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். அதனை, தொடர்ந்து இன்று (பிப்.10) ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் கோவை தெற்கு தொகுதி 64-வது வார்டு மசால் லே அவுட் வீதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டபட்டு வரும் மருத்துவ கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மருத்துவமனையின் புதிய வசதிகள் மற்றும் தேவைகளை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.



மேலும் கோவை தெற்கு தொகுதி 69-வது வார்டு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்கெட்டில் புதிதாக வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...