பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின்கீழ் கோவையில் செயல்படும் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் ரூ.12 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் நேற்று (பிப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்ட பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின்கீழ் கோவையில் செயல்படும் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் ரூ.12 ஆயிரம் என்ற மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்படவுள்ளது.

இப்பணிக்கு பட்டய ஆசிரியா் பயிற்சி, பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் இளநிலை ஆசிரியா் பட்டயப் பயிற்சி அல்லது சிறப்பு ஆசிரியா் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் டெட் தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இடைநிலை ஆசிரியா் பதவிக்கு ஆசிரியா் வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் இல்லையெனில் பள்ளிக் கல்வித் துறையின் வாயிலாக நடத்தப்படும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுய விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தலைமை ஆசிரியா், பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கான அரசு ஆரம்பப் பள்ளி, உலியம்பாளையம், கோவை - 109 என்ற முகவரிக்கு பிப்ரவரி 12 -ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...