பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழாவில் அரசு தொடக்க பள்ளியில் பயின்று வரும் 40 பள்ளி குழந்தைகளும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடங்கள் அணிந்து பேச்சு போட்டிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பள்ளி குழந்தைகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 37,576 அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறமை, கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் பேச்சு திறன் போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பிப்ரவரி 10.ம் தேதிக்குள் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டு இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா மாணவர்களின் பேச்சுத் திறன் மற்றும் கலை நிகழ்ச்சிகளோடு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியை அடுத்துள்ள பக்கோதிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி தொடக்க பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.



இதில் அப்பள்ளியில் பயின்று வரும் 40 பள்ளி குழந்தைகளும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் வேடங்கள் அணிந்து பேச்சு போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



இந்த ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டு மகிழ்ச்சியில் உற்சாகப்படுத்தினர்.



மேலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகளுக்கும், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுகளை தெரிவித்ததோடு அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பரிசுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...