உடுமலை கச்சேரி வீதியில் போக்குவரத்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உட்பட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் கச்சேரி வீதியும் ஒன்றாகும். இதில் தாசில்தார் அலுவலகம், கிளைச் சிறை, சார்நிலை கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், பொதுத்துறை வங்கி உட்பட தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அது தவிர அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இந்த வழியே பிரதானமாகும். இதனால் நாள்தோறும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு சேவைகளுக்காக வருகின்ற வாகன ஓட்டிகள் சாலையின் இரு புறங்களையும் ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால் கச்சேரி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கச்சேரி வீதியின் ஒரு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதென இடம் ஒதுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் இன்று பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உள்ளிட்ட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலை வைக்கவில்லை. மேலும் அபராதம் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டுகின்றனர். அருகில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்தம் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை. மாறாக இதனால் ஏழை எளிய மக்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள் என தெரிவித்தனர்.

உடுமலை பிரதான சாலையில் காவல் உதவி ஆய்வாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...