உடுமலை கச்சேரி வீதியில் போக்குவரத்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உட்பட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் கச்சேரி வீதியும் ஒன்றாகும். இதில் தாசில்தார் அலுவலகம், கிளைச் சிறை, சார்நிலை கருவூலம், சார் பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், பொதுத்துறை வங்கி உட்பட தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

அது தவிர அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இந்த வழியே பிரதானமாகும். இதனால் நாள்தோறும் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு சேவைகளுக்காக வருகின்ற வாகன ஓட்டிகள் சாலையின் இரு புறங்களையும் ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

இதனால் கச்சேரி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கச்சேரி வீதியின் ஒரு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதென இடம் ஒதுக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் இன்று பொதுத்துறை வங்கிக்கு வந்த பெண் ஒருவர் நிறுத்திய இருசக்கர வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் உள்ளிட்ட அங்கு வந்த வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், வாகனங்களை நிறுத்தக் கூடாது என்ற அறிவிப்பு பலை வைக்கவில்லை. மேலும் அபராதம் விதிப்பதிலும் பாரபட்சம் காட்டுகின்றனர். அருகில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வாகனங்களை தாறுமாறாக சாலையில் நிறுத்தம் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு அபராதம் விதிக்கவில்லை. மாறாக இதனால் ஏழை எளிய மக்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள் என தெரிவித்தனர்.

உடுமலை பிரதான சாலையில் காவல் உதவி ஆய்வாளர் உடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...