கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்ற நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பவர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (36). இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி” வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.7) இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு நபர் நைசாக திருடினார்.

இதைப் பார்த்த மரகதம் சத்தம் போட்டார். பின் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவரை விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...