மூலப் பொருட்களின் விலை ஏற்றம் - திருப்பூரில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம்

மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மூலப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக ஹாலோ பிளாக் உற்பத்தி தொழில் பாதிப்பு அடையும் என்பதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மாதம் கிரஷர் உற்பத்தியாளர்கள் ஜல்லி, எம்சாண்ட், பி-சாண்ட் போன்ற பொருட்களின் விலையை யூனிட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அதிகப்படுத்தியதால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் மூலப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மூலப் பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை ஆறு ரூபாய் வரை அதிகரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடும் விலையேற்றத்தால் பொதுமக்களும், கட்டுமான துறையினரும் ஹாலோ பிளாக் கற்களை வாங்க தயக்கம் காட்டுவதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில் மூலப் பொருட்களின் விலையை குறைக்க கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனைகளை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல் விலை உயர்வு என்பதால் அதற்கு மாற்றாக ஹாலோ பிளாக் வாங்கி பயன்படுத்தி வீடு கட்டுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும் எனவும், அரசுக்கு நாழரை கோடி ரூபாய் வரை வரி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 25,000 மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...